Saturday, February 14, 2009

உங்களுடன்

என் கனவுகள்
கருப்பு வெள்ளைதான்!

ஆனால் கற்பனையோ
கலர் கலராய்!

என் கனவுகளில் வெளிச்சமில்லை!
ஆனால் கற்பனையோ சூரியனாய்!!

என் கனவுகளில் தனிமையாய்!
ஆனால் நிஜத்திலோ உங்களுடன்!

Friday, February 6, 2009

வாடும் மலர்கள்


என் கனவுகள்
இருளில் பூத்த மலர்கள்!

முள் குத்தியதால்
கண்ணீர் வடிக்கும்
ரோஜாக்கள்!

சாலையோரம்
பூத்து
சூடாமல்
வாடும் மலர்கள்!

Thursday, February 5, 2009

யார்?

   என் கண்களின்
நீரை யார் துடைப்பார்?

 என் நெஞ்சின் துடிப்பை
 யார் உணர்வார்?

 என் மனதின் வேதனை
  யார் களைவார்?