Friday, October 2, 2009

கனவு நாயகனே!!


என் கனவுகளின்

கதாநாயகனே!!!

காதலின் சின்னம்

தாஜ்மகாலில் நடுநிசியில்

என்னுடன் கை

கோர்த்தவனே!!!

யமுனையின் தண்ணீர்

வற்றாமல் ஓடும்

அழகை ரசிக்க வைத்தவனே!!

விடிந்ததும்தான் தெரிந்தது,

கனவில் நீ என்னுடன்

தாஜ்மகால் கண்ண்டது!

யமுனையின் தண்ணீர்

ஏன் வற்றவில்லை

எனக்குப் புரிந்த்தது,

என்னைப் போல்

ஓராயிரம்

மும்தாஜ்களின்

கண்ணீர்தான் அது என்று!!

Wednesday, April 22, 2009

இதயமில்லாதவள்!!






















நமக்குள்
இதய மாற்ற்ம்
அறுவை சிகிச்சை
இல்லமலே..........



உங்கு பரிசளிக்க
நினைக்கும் போதெல்லாம்
என் மன்கண்முன்
வந்துபோகிறது
என் இதயம்



என்னிடம் உள்ள
எல்லாவற்றையும்
பறித்துக் கொண்டாய்
உன்
நினைவுகளைத்தவிர....

Saturday, February 14, 2009

உங்களுடன்

என் கனவுகள்
கருப்பு வெள்ளைதான்!

ஆனால் கற்பனையோ
கலர் கலராய்!

என் கனவுகளில் வெளிச்சமில்லை!
ஆனால் கற்பனையோ சூரியனாய்!!

என் கனவுகளில் தனிமையாய்!
ஆனால் நிஜத்திலோ உங்களுடன்!

Friday, February 6, 2009

வாடும் மலர்கள்


என் கனவுகள்
இருளில் பூத்த மலர்கள்!

முள் குத்தியதால்
கண்ணீர் வடிக்கும்
ரோஜாக்கள்!

சாலையோரம்
பூத்து
சூடாமல்
வாடும் மலர்கள்!

Thursday, February 5, 2009

யார்?

   என் கண்களின்
நீரை யார் துடைப்பார்?

 என் நெஞ்சின் துடிப்பை
 யார் உணர்வார்?

 என் மனதின் வேதனை
  யார் களைவார்?